திருக்குறள்

40.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.

திருக்குறள் 40

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி.

பொருள்:

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

மு.வரததாசனார் உரை:

ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

சாலமன் பாப்பையா உரை:

ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.